fbpx

தசரா பண்டிகைக்கு சிறப்பு பேருந்து…! அக்டோபர் 1 முதல் 4-ம் தேதி வரை மட்டுமே…! ஆன்லைன் மூலம் புக் செய்யலாம்…!

குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குரூப்பில்; குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், அக்டோபர் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை சென்னையிலிருந்து திருச்செந்தூர், குலசேகரன்பட்டினத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர், குலசேரப்பட்டினத்திற்கும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பண்டிகை முடிந்து திரும்பிட ஏதுவாக,அக்டோபர் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து மேற்படி ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பேருந்து வசதியினை பயணிகள் அனைவரும் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு...! மழை குறித்த வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு...!

Wed Sep 21 , 2022
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]

You May Like