fbpx

இறுதி வாய்ப்பு…!மாணவர்களே இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…! கால அவகாசம் மேலும் நீடிக்கப்படாது…!

கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் B.V.Sc., & AH, B.Tech., படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 12-ம் தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 680 இடங்களில் சேர இதுவரை சுமார் 20,000 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள இன்று முதல் 6-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. NRI மாணவர்கள் வரும் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், திருத்தம் மேற்கொள்ளவும் https://adm.tanuvas.ac.in இணையதளத்தை அணுக வேண்டும் என்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.

Vignesh

Next Post

#Govt: அனைத்து அரசு அதிகாரிகளுக்கு இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்...! மாநில அரசு அதிரடி உத்தரவு...!

Mon Oct 3 , 2022
பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள அரசாணைத் தீர்மானத்தில், அதிகாரிகள் தங்களைச் சந்திக்க வரும் மக்களிடமும், ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் குடிமக்கள் அல்லது அரசு அதிகாரிகளிடமிருந்து தொலைபேசி அல்லது மொபைல் போன் அழைப்புகளைப் பெறும்போது ‘ஹலோ’ என்பதற்குப் பதிலாக ‘வந்தே மாதரம்’ என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று […]
சூப்பரோ சூப்பர்..!! ஒரே நேரத்தில் 1,70,461 ஆசிரியர்களுக்கு பணி..!! மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!!

You May Like