fbpx

’வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் வந்தால் போதும்’..!! இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கொரோனா வந்தாலும் வந்தது எல்லா ஐடி ஊழியர்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் என்ற வரப்பிரசாதம் கிடைத்தது. கடந்த ஓராண்டாக கொரோனா பாதிப்புகள் அதிக அளவு இல்லாததால், பல்வேறு ஐடி கம்பெனிகள் அந்த கம்பெனியின் ஊழியர்களை மீண்டும் ஆபீஸ்க்கு வர வைத்து விட்டார்கள். கொரோனா வைரஸ் மற்றும் அடுத்தடுத்த சமூக விலகல் விதிமுறைகள் வீட்டிலிருந்து வேலை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வந்ததால், பல வணிக நிறுவனங்கள் ஏற்கனவே வீட்டிலிருந்து வேலையை மிகவும் தீவிரமாகப் பின்பற்றத் தொடங்கின. வீட்டிலிருந்து வேலை செய்வதை முன்னெப்போதையும் விட வசதியாக மாற்ற, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் அதிநவீன வீடியோ கான்பரன்சிங் கருவிகளை கண்டுபிடித்தனர்.

இந்நிலையில், கொரோனா பரவல் சரியாகிவிட்டதால், ஒர்க் ஃப்ரம் ஹோம் கொடுத்த பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகம் வந்து பணிபுரியச் சொல்லிவிட்டன. அந்தவகையில், முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் ஊழியர்கள் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும், அலுவலகம் இருக்கும் பகுதியிலேயே ஊழியர்கள் இருந்தால், அவர்கள் மே மாதம் முதல் அலுவலகம் வந்து வேலை பார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் புதிதாக 16.03 லட்சம் தொழிலாளர்கள் இணைப்பு...! மத்திய அரசு தகவல்.‌‌..!

Wed Apr 19 , 2023
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக சம்பளப் பட்டியல் தரவுகளின்படி, 2023 பிப்ரவரியில் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் 16.03 லட்சம் புதிய தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 2023 பிப்ரவரி மாதத்தில் சுமார் 11,000 புதிய தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலான தொழிலாளர்கள் 25 வயது பிரிவினராக இருந்தனர். இம்மாதத்தில் […]

You May Like