தமிழக அரசு பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதற்கான பல்வேறு பொருட்களை உணவுடன் சேர்த்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.
அதன்படி தற்போது தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த வருகின்றது அதன் அடிப்படையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைப்பதற்காக வாரத்தில் ஒரு நாள் தலா 20 கிராம் வேகவைக்கப்பட்ட கருப்பு கொண்டை கடலை அல்லது பாசிப்பயிறு உள்ளிட்டவை உணவுடன் வழங்கப்பட வேண்டும் என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உணவு துறையின் கீழ் இயங்கி வரும் நுகர் பொருள் வாணிப கழகம் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து அதனை கொள்முதல் செய்து பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் 250 டன் கருப்பு கொண்டை கடலையும், 19 டன் பச்சை பயிறும் கொள்முதல் செய்யும் பணியில் வாணிப கழகம் ஈடுபடுகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து பள்ளிகளும் வாரத்தில் ஒரு முறை கொண்டைக்கடலை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.