fbpx

காசுக்காக பரப்பப்படும் அருவருப்பான செயலுக்கு விளக்கமளிப்பது வேதனையளிக்கிறது!… நடிகை சாய் பல்லவி!

அடுத்தடுத்த படம் குறித்த மகிழ்ச்சியான தகவல்களை வெளியிடலாம் என்கிறபோது காசுக்காக சிலர் பரப்பும் அருவருப்பான செயலுக்கு விளக்கமளிப்பது வேதனையளிக்கிறது என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

சினிமா மீதான ரசிகர்களின் அதீத கவனம் எந்த ஒரு சின்ன தகவல்களையும் ரசிகர்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் சமீப காலமாக சமூக வலைதளங்களில் நட்சத்திரங்கள் பற்றி அதிக வதந்திகள் பரப்பப்படுகின்றன குறிப்பாக நட்சத்திரங்களின் திருமணம் பற்றிய வதந்திகள் அடிக்கடி பரவுகின்றன. தமிழ் திரையுலகை சேர்ந்த சமந்தா, திரிஷா, சாய் பல்லவி உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளின் திருமணங்கள் குறித்து சமீப காலமாக ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன.

அதில் சமந்தா நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் எனவும் செய்திகள் பரவின. ஆனால் அந்த செய்தியை அவர்கள் இருவரும் கண்டுகொள்ளவில்லை. அதேபோல் நடிகர் விஷாலை லட்சுமி மேனனுன் உள்ளிட்ட சில நடிகைகளுடன் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகின. இதேபோல், முன்னணி நடிகையாக வலம்வரும் திரிஷாவும் மலையாள திரையுல தயாரிப்பாளரை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. இதுபோன்ற வதந்திகளுக்கு பதிலடியும் கொடுக்கப்படுகிறது.

கரு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சாய் பல்லவி, மாரி 2 படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். இந்தநிலையில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்தின் பூஜையின் போது நடிகை சாய் பல்லவியும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை கிராப் செய்த சிலர் இவர்களுக்கு ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டதாக வதந்தியை பரப்பி வருகின்றனர்.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாய் பல்லவி சமூக வலைதளத்தில், நான் வதந்திகளை கண்டுகொள்வது இல்லை, ஆனால் குடும்பத்தை போன்று இருக்கும் நண்பர்களை குறித்து வதந்திகள் பரவும் போது அதை பற்றி நான் பேச வேண்டும். என் படப்பிடிப்பு பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வேண்டுமென்றே கிராப் செய்து காசுக்காகவும் அருவருப்பான நோக்கத்துடனும் பரப்பி வருகின்றனர். என் அடுத்தடுத்த படம் குறித்த மகிழ்ச்சியான தகவல்களை வெளியிடலாம் என்கிறபோது இது போன்ற அர்த்தமற்ற செயல்களுக்கு விளக்கமளிப்பது வேதனையாகவுள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Kokila

Next Post

#Breaking | மகளிர் டி20 கிரிக்கெட்..!! வங்கதேசத்தை துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா..!!

Sun Sep 24 , 2023
ஆசிய விளையாட்டு மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய வங்கதேச மகளிர் அணி 17 புள்ளி 5 ஓவர்களில் 51 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய மகளிர் […]

You May Like