fbpx

’எம்ஜிஆரை ஆண்மையற்றவர் என பேசியதே திமுக தான்’..!! ’சண்டாளன் என்றால் சமூகமா’..? ’எனக்கு தெரியாது’..!! சீமான் பரபரப்பு பேட்டி..!!

சண்டாளன் என்ற ஒரு சமூகம் இருப்பதே எனக்குத் தெரியாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கலைஞருக்கு தொடர்பான பிரச்சனைக்கு உரிய பாடலை உருவாக்கியதே அதிமுக தான். அதிமுக மேடையில் கலைஞர் தொடர்பாக பாடல் ஒழிக்கப்பட்டுள்ளது. கலைஞர் குறித்து அதிமுக பல ஆண்டுகளாக பாடிய பாடலை தான் நாங்கள் பாடினோம். அதிமுகதான் உருவாக்கி வெளியிட்டது.

அவதூறாக பேசுவதற்கு பிறப்பிடமே திமுக தான். கர்மவீரர் காமராஜரை கருவாட்டுக்காரி மகன் என்று பேசியவர் கருணாநிதி. எம்ஜிஆரை ஆண்மையற்றவர் என திமுகவினர் பேசிய வரலாறு உண்டு. திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் பெண்களை இழிவுபடுத்தி உள்ளனர். சண்டாளன் என்ற வார்த்தை கிராமங்களில் இயல்பாக பயன்படுத்தப்படும் வார்த்தை. சண்டாளன் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியவர் கருணாநிதி தான். சண்டாள் என்ற ஒரு சமூகம் இருப்பது எனக்கு தெரியாது” என தெரிவித்துள்ளார்.

Read More : Viral Video | ஆம்புலன்ஸ் இல்லாததால் சகோதரியின் உடலை தோளில் சுமந்து சென்ற சகோதரர்கள்..!! உ.பி.யில் அவலம்..!!

English Summary

Naam Tamilar Party chief coordinator Seeman said that I did not know there was a community called Sandalan.

Chella

Next Post

அதிர்ச்சி..!! அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு..!! அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..!!

Sat Jul 13 , 2024
Tamil Nadu Minister and General Secretary Duraimurugan (86) has been admitted to Chennai Apollo Hospital due to sudden illness.

You May Like