fbpx

அடுத்த 5 நாட்களுக்கு வெளுக்கப்போகுது மழை..!! எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா..? இந்திய வானிலை மையம் அலெர்ட்..!!

நாட்டின் பல மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாட்டில் தற்போது கோடை காலம் நிலவி வரும் நிலையில், வட மாநிலங்களில் வெப்பக்காற்று வீசி வெப்பநிலை கடந்த சில வாரங்களாக உச்சம் தொட்டது. இந்நிலையில், கோடை வெப்பத்தில் இருந்து மக்களை குளிர்விக்கும் விதமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய 5 வட மாநிலங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும், பின்னர் மே 14ஆம் தேதிக்கு மேல் வெப்பம் மீண்டும் உச்சமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நாட்டின் வடமேற்கில் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு நல்ல மழையும், இமயமலை பகுதிகளில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆங்காங்கே பனிப்புயல் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் மத்தியப் பகுதிகளைச் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் எனவும், கிழக்கு மத்தியப் பிரதேசத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கங்கை சமவெளி கொண்ட மேற்கு வங்க மாநிலம் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று ஆங்காங்கே காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம், அருணாசலப் பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களை பொறுத்தமட்டில் கடலோர ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடி, மின்னல், காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

7,800 பேரை பணி நீக்கம் செய்யும் பிரபல நிறுவனம்..!! ஊழியர்களுக்கு பதிலாக AI தொழில்நுட்பம்..!! அதிர்ச்சி

Wed May 3 , 2023
ஐபிஎம் நிறுவனத்தில் 7800 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக ஐபிஎம் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகளவில் பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அமேசான், ட்விட்டர், கூகுள் என மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களையும், ஆல்பபெட் நிறுவனம் 12,000 ஊழியர்களையும், […]

You May Like