fbpx

நோபல் பரிசு வென்றவருக்கு சிறை தண்டனை!… வங்கதேச நீதிமன்றம் அதிரடி!

தொழிலாளர் நலசட்டங்களை மீறியதாக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கதேசத்தை சேர்ந்த பொருளாதார நிபுணர் டாக்டர்.முகமது யூனுஸ்(83) கடந்த 1983ம் ஆண்டு கிராமீன் வங்கி என்ற பெயரில் தொடங்கிய நிறுவனம் மூலம் பலருக்கும் கடனுதவிகளை செய்து வந்தார். இதன் மூலம் அவரது வங்கி சிறுகடன்களுக்கான வீடு என பாராட்ட பெற்றது. வறுமைக்கு எதிரான பிரசாரத்துக்காக கடந்த 2006ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில் டாக்டர். முகமது யூனுஸ் நிறுவிய நிறுவனங்களில் ஒன்றான கிராமீன் டெலிகாம் நிறுவனத்தில் தொழிலாளர் நல நிதியை உருவாக்க தவறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தொழிலாளர் நலசட்டங்களை மீறியதாக முகமது யூனுஸ் உள்பட 4 நிர்வாகிகள் மீது தொழிலாளர்நல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் டாக்டர்.முகமது யூனுஸ் உள்ளிட்ட 4 பேருக்கும் 6 மாத சிறை தண்டனை விதித்து தொழிலாளர் நலநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும் ரூ.19,000 அபராதம் செலுத்தவும், அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 10 நாள் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிடப்பட்டது. வங்கதேசத்தில் வரும் 7ம் தேதி பொதுதேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டள்ளது.

Kokila

Next Post

”மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க போவது மோடிதான்”..!! பிரபல பத்திரிகையின் கணிப்பு..!!

Tue Jan 2 , 2024
இந்தாண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தலைவர்களுக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து பிரபல பத்திரிகையில் ஒரு ஆய்வு கட்டுரை வெளியாகியுள்ளது. அந்த கட்டுரையில், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநில சட்டசபை தேர்தல் வெற்றி பாஜகவை ஊக்குவிக்கும் விதமாக அமைந்து விட்டது. மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க போவது மோடிதான். இது தவிர்க்க முடியாதது. மனோதிடம் மிக்க அரசியல் தலைவராக தன்னை வெளிப்படுத்தி கொண்டுள்ள மோடி, இந்துக்கள் அதிகமுள்ள நாட்டில், […]

You May Like