fbpx

ஜனவரி-2, தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை..!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு ஜனவரி-2 ஆம் தேதி (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும்.

இந்த ஜனவரி-2 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளில் தேர்வு நடைபெறுவதாக இருந்தால் இந்த விடுமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களை கொண்டு செயல்படும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு ஜனவரி-7ஆம் தேதி(சனிக்கிழமை) அன்று வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது.

Kathir

Next Post

பள்ளி, கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு...! 2023 மே 1-ம் தேதி வரை கால அவகாசம்...! உடனே விண்ணப்பிக்கவும்....!

Sun Dec 18 , 2022
தருமபுரி மாவட்டத்தில்‌ ஒருமுறை பயன்படுத்தும்‌ பிளாஸ்டிக்‌ தடையை திறம்பட செயல்படுத்தி, பிளாஸ்டிக்‌ இல்லாத வளாகத்தை உருவாக்கும்‌ பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, வணிக நிறுவனங்கள்‌ தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால்‌ வழங்கப்படும்‌ மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் “மீண்டும்‌ மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச்‌ செல்லும்‌ வகையில்‌, 2022-2023 நிதியாண்டுற்காக சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ பருவநிலை மாற்றம்‌, இளைஞர்‌ நலன்‌மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ அவர்களால்‌ சட்டப்‌ […]

You May Like