அண்ணாமலையின் கடை போனி ஆகாத கடை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
பாஜக எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவை நோக்கி மாற்றுக் கட்சியை சேர்ந்த பலர் அதிமுகவில் ஐக்கியமாகக் கொண்டுள்ளனர். நாங்கள் பாஜக மாதிரி வலை விரித்து பிடிக்கவில்லை.
நேற்று கூட அண்ணாமலை கடை விரித்தார். அண்ணாமலை என்ற வியாபாரி கடை விரித்தார். அந்த கடையில் வாங்குவதற்கு ஆள் யாரும் வரவில்லை, அந்த கடைக்கும் யாரும் வரவில்லை. அது போனியாக ஆகாத கடை, அண்ணாமலை கடை போனியா ஆகாத கடை” என ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.
Read More : PM Modi | ’என் மண் என் மக்கள்’ யாத்திரை..!! தமிழ்நாடு வந்தடைந்தார் பிரதமர் மோடி..!!