fbpx

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலை..!! மாதம் ரூ.30,000 சம்பளம்..!! விண்ணப்பிக்க அக்.31ஆம் தேதியே கடைசி..!!

இந்திய அஞ்சல் துறையின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் – இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க்

துறையின் பெயர் – கிராமின் டக் சேவக்

தேர்வின் பெயர் – IPPB எக்ஸிகியூட்டிவ் ஆட்சேர்ப்பு 2024

காலிப்பணியிடங்கள் – 344 (தமிழ்நாட்டில் 13 காலியிடங்கள்)

கல்வித் தகுதி – விண்ணப்பதாரர்கள் இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

01.09.2024 இன் படி அஞ்சல் துறையுடன் கிராமின் தாக் சேவக் ஆக குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு – குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

IPPB Executive Recruitment 2024-க்கான நிர்வாகப் பதவிகளுக்கான ஆன்லைன் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. புதிய பயனர்களாக இருந்தால் முதலில் போர்ட்டலில் பதிவு செய்து, தங்கள் பதிவு ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விண்ணப்பத்தை நிரப்பலாம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.750 செலுத்த வேண்டும்.

சம்பளம் – மாத சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி – அக்டோபர் 31

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://ippbonline.in./ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Read More : மனைவியை கொன்றதற்காக 4 ஆண்டுகள் சிறையில் இருக்கும் கணவர்..!! திடீரென உயிரோடு வந்ததால் வழக்கில் ட்விஸ்ட்..!!

English Summary

India Post Payment Bank, which is a part of the Indian Postal Department, has published an employment notification.

Chella

Next Post

தலைமை செயலகத்தில் உள்ள கட்டிடத்தில் விரிசல்…! அச்சத்தில் வெளியேறிய ஊழியர்கள்..! ஆய்வு செய்த அமைச்சர் ஏ.வ.வேலு..!

Thu Oct 24 , 2024
There is a crack in the building in the Secretariat...! Employees left in fear..! Minister A.V.Velu who investigated..!

You May Like