தொடர் கனமழை காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பொழிந்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன், விடாமல் மழை பொழிவு இருப்பதால் இன்று புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், கல்வியமைச்சர் நமச்சிவாயம் இன்று மாலை கூறுகையில், “தொடர்ந்து கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் புதுச்சேரி, காரைக்காலுக்கு நாளை (நவ. 4), நாளை மறுநாள் (நவ. 5) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.