பிக்பாஸ் சீசன் 7இல் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் விதமாக ‘Know Your Housemates’ என்ற டாஸ்க் தற்போது நடந்து வருகிறது. இதில், 2 போட்டியாளர்கள் தாங்கள் எந்த அளவுக்கு பிரபலம் என்பதையும் இதில் விவாதிக்க வேண்டும். இந்த டாஸ்க் தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரவணன் மற்றும் ஜோவிகாவுக்கு இடையில் நடந்து வருகிறது.
இந்த டிபேட்டில் ஜோவிகா பேசியபோது, ”நான் ஒரு விஷயத்தை சொல்ல விருப்பப்படுகிறேன். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு நாட்களில் எனக்கு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், ஏற்கெனவே என் பள்ளி அனுபவங்களை உங்களிடம் சொல்லி இருக்கிறேன். நான் சில டிபேட்களில் கலந்து கொள்ள ஆசைப்பட்டிருக்கிறேன்.
ஆனால், என்னை யாரும் கலந்துகொள்ள விடவில்லை. இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததால், அந்த திறமையே எனக்கு இருக்கிறது என்று இப்போதுதான் எனக்கே தெரிகிறது” என்று அழுது கொண்டே கூறினார். ஜோவிகாவின் இந்தப் பேச்சு அங்கிருக்கும் சக போட்டியாளர்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்த அவரை கைத்தட்டி உச்சாகப்படுத்தி தங்களின் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.