இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், இளநிலை மொழிபெயர்ப்பாளர் மற்றும் முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வு 16 ம் தேதி நடைபெற உள்ளது.
பணியாளர் தேர்வு ஆணையம், கணினி அடிப்படையில் “இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், இளநிலை மொழிபெயர்ப்பாளர் மற்றும் முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வு, 2023”-க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தெற்கு மண்டலத்தில் 318 தேர்வர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தில் கர்னூல், விசாகப்பட்டினம், விஜயவாடா, தெலங்கானாவில் ஐதராபாத், தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி என 7 நகரங்களைச் சேர்ந்த 7 மையங்களில் தேர்வு நடைபெறும்..
தென் மண்டலத்தில் இத்தேர்வு 16.10.2023, அன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை ஒரே ஷிப்டாக நடைபெறும்.தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பிருந்தும், பிறகு அவரவர் தேர்வு நாள் வரை மட்டும் பணியாளர் தேர்வாணைய வலைத்தளத்தில் இருந்து மின்னணு – தேர்வு அனுமதி சீட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள இயலும்.
இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், ஆன் லைன் விண்ணப்பத்தில் தெரிவித்த மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.