fbpx

ஒரே வாரத்தில் முகம் பிரகாசிக்க இதை மட்டும் செய்யுங்க..!! செலவே இல்லாமல் சூப்பர் டிப்ஸ்..!!

நாம் அனைவருக்கும் இயற்கையாகவோ ஆரோக்கியமாகவோ அல்லது பளபளப்பான சருமத்தை பெற ஆசை. அதற்காக பல ஆயிரம் கணக்கில் செலவு செய்து நாம் முக கிரீம்களை வாங்கி உபயோகிப்போம். ஆனால், அதில் எந்த பலனும் கிடைக்காது. இயற்கையான முறையில் ஆரோக்கியமான மற்றும் மென்மையான சருமத்தை பெற விரும்பினால் உங்களுக்கான சில உதவிக்குறிப்புகளை நாங்கள் கூறுகிறோம். விசேஷ நாட்களில் மட்டுமில்ல… தினமும் பிரகாசமாக முகத்தை பெற இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை வீட்டிலேயே தயாரித்து உபயோகிக்கலாம். இதை, இரவு நேரங்களில் முகத்தில் உபயோகித்து வந்தால், ஒரே வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் ஃபேஸ் மாஸ்க் :

தேவையான பொருட்கள் :

பால் – ½ கப்.

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்.

செய்முறை :

* ஒரு கிண்ணத்தில், பால் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள மஞ்சள் ஃபேஸ் மாஸ்க் தயார்.

* இப்போது, உங்கள் முகத்தை சுத்தமாக கழுவிய பின் முகத்தை ஈரம் இல்லாமல் துடைக்க வேண்டும். தயார் செய்து வைத்த பாலை, காட்டன் வைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும்.

* இதை 30 நிமிடங்கள் வைத்து பின்னை குளிர்ந்த நீரை கொண்டு சுத்தம் செய்யவும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய் – டீ ட்ரீ ஆயில் மாஸ்க் :

தேவையான பொருட்கள் :

தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்.

தேயிலை மர எண்ணெய் – 3 முதல் 4 டீஸ்பூன்.

செய்முறை :

* முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக்கொள்ளவும். அதில், டீ ட்ரீ ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* இப்போது, உங்கள் முகத்தை சுத்தமாக கழுவிய பின் முகத்தை ஈரம் இல்லாமல் துடைக்கவும். இதையடுத்து, தயார் செய்து வைத்த இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்யவும்.

* பின்னர், 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை ஒரு வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Chella

Next Post

முன்பகை காரணமாக இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை…..! பழனி பேருந்து நிலையம் அருகே பயங்கரம்…….!

Thu May 4 , 2023
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குறும்பபட்டியைச் சேர்ந்தவர் கோபால் இவருடைய மகன் வடிவேல்(29).இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பனியில் பணியாற்றினார். இந்த நிலையில் கடந்த 1ம் தேதி தொழிலாளர் தினம் என்பதால் விடுமுறை முன்னிட்டு அவருடைய வீட்டிற்கு வந்து 2 நாட்களாக பழனியில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில்தான் நேற்று காலை பழனி பேருந்து நிலையம் முன்பு அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது சில மர்ம […]

You May Like