fbpx

ஒரே ஒரு போன் கால்.. ரூ.39 லட்சத்தை இழந்த பெண்… அதிர வைக்கும் சைபர் மோசடி…

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் சைபர் குற்றவாளிகளிடம் ரூ.39 லட்சத்தை இழந்துள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த இல்லத்தரசி ஒருவருக்கு அக்டோபர் 2 ஆம் தேதி தொலைபேசி அழைப்பு வந்தது.. அந்த பெண் கேபிசி மூலம் லாட்டரி வென்றதாகவும், பணத்தை திரும்பப் பெறுவதற்கான நடைமுறையையும் அவருடன் தொலைபேசியில் பேசிய நபர் தெரிவித்துள்ளார்.. மேலும் பல்வேறு கட்டணங்களில் தொகைகளை டெபாசிட் செய்யும்படி அந்த நபர் அறிவுறுத்தினார். வங்கி மேலாளர் என்ற கூறிக்கொண்டு சிலர் பணம் அனுப்பும்படி பேசி உள்ளனர்.. வெவ்வேறு கட்டணங்கள் என்ற பெயரில் மொத்தம் ரூ.39 லட்சத்தை அனுப்பிய அவர், பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

பெண் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய ஐதராபாத் நகர சைபர் கிரைம் போலீசார் மோசடி செய்ததாக பாட்னாவை சேர்ந்த ராகேஷ் குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போன்கள், 73 டெபிட் கார்டுகள், 30 சிம்கார்டுகள், 11 வங்கிக் கடவுச்சீட்டுகள், 2 காசோலை புத்தகங்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் கேபிசி லாட்டரி போன்ற லாட்டரிகள் மற்றும் தெரியாத நபர்களால் அறிவிக்கப்படும் அதிர்ஷ்டக் குலுக்கல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது..

Maha

Next Post

நுபுர் ஷர்மா தலையை வெட்டுவதாக கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது...

Wed Jul 6 , 2022
பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, ஞானவாபி விவகாரம் குறித்த தொலைக்காட்சி செய்தி விவாதத்தின் போது நபிகள் நாயகத்திற்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.. இதையடுத்து நுபுர்ஷர்மா மீது பல காவல்நிலையங்களில் புகாரளிக்கப்பட்டது.. மேலும் பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நுபுர் ஷர்மா கைது செய்யப்பட வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றது.. மேலும் பல்வேறு அரபு நாடுகளும் […]

You May Like