பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம், திமுக-வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா மற்றும் டெய்சி விவகாரம் தொடர்பாக பேசியதால் 6 மாத காலத்திற்கு கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகுவதாக காய்த்ரி ரகுராம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் கட்சியில் இருந்து விலகுவதாகவும், அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன் வைத்திருந்தார்.

இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், பாதுகாப்பு மற்றும் சுதந்திரமாக பணியாற்ற விடுவதாக உறுதியளித்தால் அதிமுக, திமுக, விசிக, நாம் தமிழர் கட்சி என எந்த கட்சி அழைத்தாலும் நான் இணைய ரெடி என்று நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு திமுகவினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் விரைவில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.