யூடியூபர் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், சாலை விதிகளை மீறியதாகக் கூறி தமிழக காவல்துறையால் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். இருந்த போதிலும் தொடர்ந்து சாலை விதிகளை மீறிய அவர், நேற்று விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பைக் சவாரி செய்து சாகசம் செய்தனர்.
அப்போது காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் பைக்கில் சென்றபோது வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட டிடிஎப் வாசன் விபத்தில் சிக்கினார். இதில், பைக் இரண்டு, மூன்று முறை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாசன் பலத்த காயம் அடைந்து காரப்பேட்டை அருகே உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் காவல்துறை என்று அவரை கைது செய்தனர்.
மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 19, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டும் குற்றத்தின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.