fbpx

#சற்றுமுன்: யூடியூபர் டிடிஎஃப் வாசனை கைது செய்தது காவல்துறை…!

யூடியூபர் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், சாலை விதிகளை மீறியதாகக் கூறி தமிழக காவல்துறையால் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். இருந்த போதிலும் தொடர்ந்து சாலை விதிகளை மீறிய அவர், நேற்று விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பைக் சவாரி செய்து சாகசம் செய்தனர்.

அப்போது காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் பைக்கில் சென்றபோது வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட டிடிஎப் வாசன் விபத்தில் சிக்கினார். இதில், பைக் இரண்டு, மூன்று முறை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாசன் பலத்த காயம் அடைந்து காரப்பேட்டை அருகே உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் காவல்துறை என்று அவரை கைது செய்தனர்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 19, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டும் குற்றத்தின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

கணவனுக்கு சரமாரி கத்தி குத்து, பரிதாப நிலையில் மனைவி....! நடந்தது என்ன, காவல்துறையினர் தீவிர விசாரணை....!

Tue Sep 19 , 2023
தலைநகர் டெல்லியில் வாசித்து வருபவர்கள் அரவிந்த் மண்டல் ரேகா மண்டல் தம்பதியினர் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியிலிருந்து தன்னுடைய மகனை அழைத்து வந்து கொண்டிருந்த போது அரவிந்த் மண்டலக்கும், இன்னொரு நபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடுமையான வாக்குவாதம் மற்றும் தகராருக்கு பிறகு இருவருக்கும் இடையே நடந்த தகராறு முடிவுக்கு வந்துள்ளது. அதன் பிறகு அரவிந்த் […]

You May Like