தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு நடத்திய நிலையில், காணாமல் போன மீனவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது..
தமிழக – கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பாலாறு வனப்பகுதியில், பாலாறும் – காவிரியும் கலக்கும் இடத்தில் தமிழக மீனவர்கள், பரிசலில் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த சூழலில் கடந்த செவ்வாய்க்கிழமை பரிசல்களில் சென்ற மீனவர்கள், பாலாற்றில் மீன் பிடித்துள்ளனர்.. அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் சிலர் தப்பி, கிராமங்களுக்கு சென்று விட்டனர்.. ஆனால் இந்த சம்பவத்தை தொடர்ந்து, கோவிந்த பாடியை சேர்ந்த ராஜா ஒரு மீனவர் காணாமல் போயிருந்தார்.. எனவே அவர் கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியாகி இருக்கலாம் என்று கிராம மக்கள் பாலாற்றங்கரையில் தேடி வந்தனர்..
இந்நிலையில் மேட்டூர் அருகே காணாமல் போன மீனவரின் உடல் மீட்கப்பட்டது.. தமிழக – கர்நாடக எல்லையை ஒட்டி அடிப்பலாறு பகுதியில் காணாமல் போன ராஜா என்ற மீனவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.. கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராஜா உயிரிழந்தாரா என தமிழக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகே, ராஜா எப்படி இறந்தார் என்பது குறித்து தெரியவரும்..