கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியில் 26 வயது மாருதி என்ற நபர் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு தலகட்டபுரா பகுதியில் வசிக்கும் அசோக் என்பவருடைய மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது ஒரு கட்டத்தில் அசோக்கிற்கு தெரிய வர கள்ள காதலன் மாருதி மற்றும் தனது மனைவி இருவரையும் கண்டித்து இருக்கிறார். அவர் கண்டித்த பின்னர் கூட கள்ளக்காதலை கைவிட இருவருமே மறுத்துள்ளனர்.
எனவே ஆத்திரமடைந்த அசோக் கள்ளக்காதலன் மாருதியை நேரில் சந்தித்து பேச வேண்டும் என அழைத்துள்ளார். அவரும் சென்ற நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் அசோக் ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கள்ளக்காதலன் மாருதி குத்தி ஆத்திரம் தீர கொலை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து, இது குறித்து தகவல் போலீசுக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து அசோக்கை கைது செய்துள்ளனர். பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.