fbpx

தேசியக்கொடி ஏற்றும் உரிமையை முதலமைச்சர்களுக்கு பெற்றுத் தந்த கருணாநிதி..! எப்படி தெரியுமா?

சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை முதலமைச்சர்கள் பெறுவதற்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முக்கியப் பங்கு வகித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின், சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தனது தந்தையுமான மு.கருணாநிதி ஏற்றும் கருப்பு-வெள்ளை புகைப்படத்தை தனது புரொஃபைல் படமாக மாற்றினார். இந்தப் புகைப்படத்தை முதலமைச்சர் சமூக வலைதளத்தில் புரொஃபைல் படமாக வைத்ததற்கு பின்னாலும் ஒரு கதை உண்டு.

தேசியக்கொடி ஏற்றும் உரிமையை முதலமைச்சர்களுக்கு பெற்றுத் தந்த கருணாநிதி..! எப்படி தெரியுமா?

சுதந்திர தினத்தை நாடு இன்று கொண்டாடும் வேளையில், 1974ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை முதல்வர்கள் பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் கருணாநிதி. நெஞ்சுக்கு நீதி என்ற தனது சுயசரிதை நூலில், ‘ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி மாநிலத் தலைமைச் செயலகத்தில் ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களுக்கு ஏன் இந்த உரிமையை வழங்கக் கூடாது என டெல்லிக்கு (மத்திய அரசுக்கு) கடிதம் எழுதியும், நேரில் பலமுறை கேள்வி எழுப்பியதாலும், குடியரசு தினத்தன்று ஆளுநர்களும் சுதந்திர தினத்தன்று முதல்வர்களும் தேசியக் கொடியை ஏற்றுவார்கள் என முடிவு செய்யப்பட்டது.

Chella

Next Post

சுதந்திர போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.18,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்வு.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..

Mon Aug 15 , 2022
சுதந்திர போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.18,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. நாட்டின் 76-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.. இதே போல் மாநில முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அந்த வகையில் சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை […]
தலைவர் பதவிக்கு அக்.7இல் முக.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்..!! அக்.9இல் திமுக பொதுக்குழு கூட்டம்..!!

You May Like