ஜார்க்கண்ட் மாநில பகுதியில் உள்ள சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் பழமையான பழங்குடியினத்தில் தில்தார் அன்சாரி எனபவர் தனது இரண்டாவது மனைவி ரூபிகா பஹாதி(22) என்பவருடன் வசித்து வந்துள்ளார் . இந்த நிலையில் தம்பதிகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் கணவர் ரூபிகாவை கொலை செய்து உடலை 18 துண்டுகளாக வெட்டியுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த காவல் துறையினர் , விசாரணை செய்ததில் ரூபிகாவின் மரணத்தில் கணவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். இதனிடையே வெட்டப்பட்ட உடற்பாகங்களில் சுமார் 12 பாகங்கள் கிடைத்துள்ளன. மேலும் காணாமல்போன 6 பாகங்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இதில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.