fbpx

காகங்களை கொன்று பிரியாணிக்காக விற்பனையா..? பொள்ளாச்சி அருகே பயங்கரம்..!! விசாரணையில் அதிர்ச்சி..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பெரிய கவுண்டனூர் உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில், கடந்த சில நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் இறந்து வந்துள்ளன. பின்னர் இறந்து விழுந்த காகங்கள் சிறிது நேரத்தில் காணாமலும் போயுள்ளன. காகங்கள் மாயமாகியதால், இறந்த காகங்களை மர்ம நபர்கள் யாரும் எடுத்துச் செல்கின்றனரா என்ற சந்தேகம் நிலவிவந்தது. இந்நிலையில் நேற்று காலை நாகராஜ் என்பவரது விவசாய தோட்டத்தில், ஒரு நபர் இறந்த காகங்களை சாக்கு பையில் போட்டு நிரப்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற விவசாயி நாகராஜை கண்டதும் அந்த நபர், தப்பி ஓடியுள்ளார். பின்னர் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அந்த மர்ம நபரை துரத்திச் சென்று மடக்கி பிடித்துள்ளனர்.

காகங்களை கொன்று பிரியாணிக்காக விற்பனையா..? பொள்ளாச்சி அருகே பயங்கரம்..!! விசாரணையில் அதிர்ச்சி..!!

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அங்கு விரைந்து சென்ற கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணையில் ஈடுபட்ட போது, சிஞ்சுவாடி கிராமத்தை சேர்ந்த சர்க்கஸ் தொழிலாளி சூர்யா (37) என்பவர் தான் காகங்களை கொன்று வந்துள்ளார் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து போலீசார், அவரிடமிருந்து 20-க்கும் மேற்பட்ட காகங்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், வெண்படை நோயை குணப்படுத்துவதற்காக மருந்து தயாரிக்கவே காகங்களை கொன்றதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இவர் காகங்களை உணவு விடுதிகளுக்கு பிரியாணி தயாரிக்க கொடுப்பதற்காக கொன்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

ஆபாச வீடியோவை காட்டி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை……! போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் அதிரடி கைது…..!

Tue Mar 14 , 2023
தற்சமயம் பெண் குழந்தைகளை பெற்றோர்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்கு பயப்படுகிறார்கள். காரணம், நாடு முழுவதும் பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. ஆனாலும் பெற்றோர்கள் குழந்தைகளை நம்பிக்கையுடன் அனுப்பி வைப்பது பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மட்டுமே. ஆனால் அப்படிப்பட்ட இடத்திலும் கூட அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கும் அருவருக்கத்தக்க செயலை செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களே இது போன்ற […]

You May Like