fbpx

“உணவுப் பொருட்களின் லேபிள்கள் தவறான வழிகாட்டுதல்களை தரலாம்” – ICMR எச்சரிக்கை.!!

உணவுப் பொருட்களின் மீது ஒட்டப்பட்டுள்ள லேபில்கள் தவறாக வழி நடத்தலாம் என ‘ICMR’ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆரோக்கியமான உணவுப் பொருட்களை தேர்வு செய்வதற்கு உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நுகர்வோர் கவனமாக படிக்க வேண்டும் எனவும் ஐசிஎம்ஆர் கேட்டுக் கொண்டுள்ளது.

சர்க்கரை இல்லாத உணவு பொருட்களில் கொழுப்பு இருக்கலாம். பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பழச்சாறுகளில் 10 % ஃப்ரூட் பல்ப்(பழக் கூழ்) சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் வெளியிட்ட உணவு வழிகாட்டுதல்களில் பாக்கெட் உணவு பொருட்களில் ஒட்டப்பட்டிருக்கும் லேபில்கள் நுகர்வோரின் கவனத்தை ஈர்க்கவும் தங்களது தயாரிப்பு ஆரோக்கியமானது என நம்ப வைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) கடுமையான விதிமுறைகளைக் கொண்டிருந்தாலும், லேபிள்களில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் தவறாக வழிநடத்தும்,” என ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் வெளியிட்டுள்ளது.
.
இது தொடர்பாக தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் சில எடுத்துக்காட்டுகளை வழங்கியிருக்கிறது. அதன்படி ஒரு உணவுப் பொருளில் நோய்கள் அல்லது செயற்கை பொருட்கள் சேர்க்கப்படாமல் குறைந்தபட்ச செயல் ஆக்கத்தில் தயாரிக்கப்பட்டால் அதனை இயற்கையான உணவுப் பொருள் என்று அழைக்கலாம். இந்த சொல் பெரும்பாலும் தவறாக பயன்படுத்தப்படுகிறது. உணவுப் பொருட்களில் கலந்துள்ள ஒன்று அல்லது இரண்டு பொருட்களை அடையாளம் காண தயாரிப்பாளர்கள் இயற்கை என்ற சொல்லை லேபிள்களில் பயன்படுத்துகின்றனர். இது நுகர்வோரை தவறாக வழி நடத்தும் என தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

உதாரணமாக பழச்சாறுகளில் 10 சதவீதம் ஃப்ரூட் பல்ப் சேர்க்கப்பட்டிருந்தால் அதனை பழ சாறு அல்லது ஃப்ரூட் பல்ப் என அடையாளப்படுத்தலாம் என்று FSSAI தெரிவிக்கிறது. ஆனால் அந்த தயாரிப்பில் 10 சதவீதம் ஃப்ரூட் பல்புடன் சர்க்கரை மற்றும் பிற ரசாயனங்களும் சேர்க்கப்பட்டிருக்கும். இதன் காரணமாகவே ஒரு பொருள் வாங்கும் முன்பு அதன் லேபிளை நன்றாக படித்து வாங்குமாறு அறிவுறுத்துவதாக தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

முழு தானியத்தால் தயாரிக்கப்பட்டது என்ற வார்த்தை தவறாக புரிந்து கொள்ளப்படலாம் என தேசிய ஊட்டச்சத்து ஆணையம் தெரிவிக்கிறது. இந்த அறிக்கையானது உணவுப் பொருட்கள் தீவிரமாக பதப்படுத்தப்படவில்லை என்று அர்த்தம் இல்லை. ஒரு உணவு லேபிள் ‘ஆர்கானிக்’ என்று கூறினால், அது அனைத்து செயற்கைப் பாதுகாப்புகள், சுவைகள் மற்றும் வண்ணங்கள் இல்லாதது மற்றும் உணவுப் பொருட்கள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்கள் இல்லாதவை என்று அர்த்தப்படும் எனக் கூறுகிறது.

லேபிளில் ஊட்டச்சத்து விவரங்கள் என்ற அறிக்கை குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் பாக்கெட்டுகளில் உள்ள உணவுகளில் பரிமாறும் அளவு குறிப்பிடப்பட்டுள்ளது. இது லேபிளில் உள்ள மிக முக்கியமான தகவல்களில் ஒன்றாகும், ஏனெனில் காட்டப்படும் அனைத்து ஊட்டச்சத்து தகவல்களும் பரிந்துரைக்கப்பட்ட பரிமாறும் அளவை அடிப்படையாகக் கொண்டவை என வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

பரிமாறும் அளவானது வேறு வழியில் பட்டியலிடப்பட்டாலும் பெரும்பாலும் கிராம்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். ஒரு பாக்கெட்டின் நிகர எடையை மக்கள் சரிபார்க்க வேண்டும் என வழிகாட்டுதல் கேட்டுக் கொண்டது. இது பாக்கெட்டில் உள்ள மொத்த பொருட்களின் எடையை குறிப்பதாகும். லேபிள் தகவல் பொதுவாக 100 கிராம்/100 மில்லிக்கு சேவையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் பல பேக்கேஜ்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகள் 100 கிராம் அல்லது 100 மில்லிக்கு மேல் இருக்கலாம்.

பயன்படுத்தப்படும் உணவுப் பொருளின் அளவைப் பொறுத்து, பயன்படுத்தப்படும் பகுதியிலுள்ள கலோரிகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை மதிப்பிடுங்கள்,” என்று வழிகாட்டுதல்கள் கூறியது. இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல் பட்டியல் ICMR-என்ஐஎன் இயக்குனர் டாக்டர் ஹேமலதா ஆர் தலைமையிலான பல துறை நிபுணர்கள் குழுவால் உருவாக்கப்பட்டது. மேலும் இந்த அறிக்கை பல்வேறு ரீதியான அறிவியல் ஆய்வுகளுக்குப் பிறகு வரையப்பட்டிருக்கிறது.

Read More: PM Modi | “இன்னும் மோடியை மக்கள் நம்புகிறார்களா.?” தேர்தல் வாக்குறுதி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்.!!

Next Post

BOB வங்கியில் வேலைவாய்ப்பு... டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...!

Sun May 12 , 2024
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் BC Supervisors பணிகளுக்கு என 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.15,000 மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக […]

You May Like