fbpx

கடந்த 24 மணிநேரம் உடல்நிலை சீராக இல்லை..! நுரையீரல் சிகிச்சை தேவை..! மருத்துவமனை அறிக்கை…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீராக இல்லை, அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 வாரங்களாக போரூரில் உள்ள தனியார்(மியாட்) மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீராக இல்லை எனவும், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்வும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனை அறிக்கையில் , “திரு.விஜயகாந்த் அவர்களின் உடலனத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

ஆன்லைன் பண பரிவர்த்தனை மோசடி.! 70 லட்சம் செல்போன் நம்பர்கள் சஸ்பெண்ட்.! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை.!

Wed Nov 29 , 2023
நாட்டில் அதிகரித்து வரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மோசடிகளை கட்டுப்படுத்தும் பொருட்டு மோசடியுடன் தொடர்புடைய 70 லட்சம் செல்போன் இணைப்புகளை இடைநீக்கம் செய்திருப்பதாக நிதி சேவைகள் துறை செயலாளர் விவேக் ஜோஷி தெரிவித்திருக்கிறார். அதிகரித்து வரும் இணையதள மோசடிகள் மற்றும் டிஜிட்டல் பணப்பருவத்தினை மோசடிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக தேசிய நிதி சேவைகள் செயலாளர் விவேக் ஜோசி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொருளாதாரத் துறை அதிகாரிகள் தகவல் […]

You May Like