fbpx

மழை வெள்ள பாதிப்பு காரணமாக 3 மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!

மழை வெள்ள பாதிப்பு காரணமாக 3 மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவும் காரணத்தால், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இடைவிடாமல் பெய்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு உதவிகளுக்காக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கனமழை பாதிப்பு மற்றும் அங்கு நடந்து வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து இந்திய ராணுவம், விமானப் படை, கப்பல்படை, தேசிய பேரிடர் மீடப்புப் படை வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களே மீண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மழை நீர் இன்னும் சில இடங்களில் வடியாமல் உள்ளதால் நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Vignesh

Next Post

ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பியது..!! காரணம் இதுதானா..? பொதுமக்கள் அதிர்ச்சி..!!

Wed Dec 20 , 2023
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளத்தில் அதிசய கிணறு ஒன்று உள்ளது. எப்படிப்பட்ட மழை பெய்தால், வெள்ளம் வந்தாலும் இந்த கிணறு நிரம்புவதே இல்லை என அப்பகுதி தெரிவிக்கின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு பெருமழை பெய்து உருவான வெள்ள நீர் கிணறுக்குள் திருப்பிவிடப்பட்டது. அப்போதும், இந்த கிணறு நிரம்பவில்லை. இதையடுத்து, ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இந்த கிணறு முழுக்க சுண்ணாம்புப் பாறைகளால் உருவானது என்பது தெரியவந்தது. […]

You May Like