எல்ஐசி முகவர்கள் மற்றும் ஊழியர்களுடைய நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. எல்.ஐ.சி. ஒழுங்குமுறைகள் 2017 திருத்தங்கள் பணிக்கொடை வரம்பு அதிகரிப்பு மற்றும் சீரான குடும்ப ஓய்வூதிய விகிதம் ஆகியவற்றோடு தொடர்புடையது. முகவர்களுக்கான பணிகளை வரவும் 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது LIC முகவர்களின் பணி நிலைமை மற்றும் நன்மைகளை கணிசமான முன்னேற்றத்தை கொண்டு வரும் கழிவுத்தொகைக்கு தகுதி பெற செய்தல் அதன் மூலம் அவர்களுக்கு அதிகரித்த நிதி திரட்டி வழங்குதல் ஆகிவிட்டது ஒப்புதல் கிடைத்துள்ளது. தற்போது எல்ஐசி முகவர்கள் பழைய முகமையின் கீழ் முடிக்கப்பட்ட எந்த ஒரு வணிகத்திற்கும் புதுப்பிப்பு கழிவு தொகைக்கு தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
முகவர்களுக்கான குறித்த கால காப்பீடு திட்டம் 3,000 முதல் 10,000 வரையிலிருந்து 25 ஆயிரம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டர்ன் இன்சூரன்ஸ் இந்த அதிகரிப்பு மூலம் இறந்த முகவர்களின் குடும்பங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்கு கணிசமான நலத்திட்ட நன்மையும் கிடைக்கும்.