சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை பள்ளியிலேயே பயின்ற மாணவர்களுக்கு பழகுநர் உரிமம் எடுக்காமலேயே நேரடியாக நிரந்தர லைசென்ஸ் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளா அரசானது பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அமல்படுத்த உள்ளது. அதாவது, சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை மாணவர்களுக்கு பள்ளியிலேயே பயிற்றுவித்து, அவர்களுக்கு லைசென்ஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் சாலை மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து சேர்க்கப்பட உள்ளது.
அதனை படித்து 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பழகுநர் உரிமம் வழங்கப்படும் என்றும் அதன் பின் 18 வயது நிரம்பியவர்கள் பழகுநர் உரிமம் எடுக்காமலேயே நேரடியாக நிரந்தர லைசென்ஸ்க்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு பொது கல்வித்துறை அமைச்சகத்திற்கும், முதல்வருக்கும் அளிக்கப்பட்டுள்ளதாக கேரளா போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆண்டனி ராஜு தெரிவித்துள்ளார்.