fbpx

வரும் 1-ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகள் அனுமதி கிடையாது…! ஆட்சியர் போட்ட உத்தரவு…!

தொழிலாளர்‌ தினத்தை முன்னிட்டு வருகின்ற 01.05.2023 திங்கட்கிழமை அன்று சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள மதுபானக்கடைகள்‌ மற்றும்‌ மதுபானக்‌ கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ கூறியதாவது; வருகின்ற 01.05.2023 திங்கட்கிழமை அன்று தொழிலாளர்‌ தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள்‌ மூடப்பட வேண்டுமென அரசால்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே,சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து எப்‌.எல்‌.1, எப்‌.எல்‌.2, எப்‌.எல்‌.3, எப்‌.எல்‌.3ஏ மற்றும்‌ எப்‌. எல்‌.3ஏஏ உரிமம்‌ பெற்ற ஹோட்டல்‌ மற்றும்‌ கிளப்புகளில்‌ இயங்கி வரும்‌ மதுபானக் கூடங்கள்‌, டாஸ்மாக்‌ மதுபானக்கடைகள்‌ மற்றும்‌ டாஸ்மாக்‌ மது பானக்கடைகளுடன்‌ இணைந்துள்ள மதுபானக்கூடங்கள்‌ அனைத்தும்‌ மூடப்பட வேண்டும்‌.

மேலும்‌, மேற்காணும்‌ நாட்களில்‌ இதனை மீறி விற்பனை செய்பவர்கள்‌ மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‌ என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

வெற்றிகரமாக விண்ணில் ஏவிய PSLV-C55 ராக்கெட்...! பாராட்டு தெரிவித்த எலான் மஸ்க்...!

Tue Apr 25 , 2023
பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்டின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பிஎஸ்எல்வி மற்றும் என்எஸ்ஐஎல் குழுவினர் அனைவருக்கும் SPACE- X நிறுவனர் எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனியார் செயற்கைக்கோள்களை ஒப்பந்த அடிப்படையில் விண்ணிற்கு அனுப்பி வருகிறது. இந்த வணிக ரீதியான ஏவுதல் பணிகளை இஸ்ரோவின் வணிகப்பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த அரசு நிறுவனம் தயாரித்துள்ள டெலியோஸ் 2 என்ற […]

You May Like