fbpx

கள்ளச்சாராயத்தால் பறிபோன உயிர்கள்..!! மெத்தனால் இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துமா..?

கள்ளச்சாராயத்தில் கலந்திருந்த மெத்தனாலே பலரின் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. மெத்தனால் என்றால் என்ன..? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

மெத்தில் ஆல்கஹால் என அழைக்கப்படும் மெத்தனால், எத்தனாலை விட அதிக நச்சுத்தன்மை கொண்டது. எளிதில் ஆவியாகக் கூடிய, தீப்பற்றக் கூடிய, நிறமற்ற மெத்தனால் எரிபொருளாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது. நீர் மற்றும் மெத்தனால் கலவை அதிக செயல்திறன் கொண்ட இயந்திரங்களில் உறைநிலையை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.

மெத்தில் எஸ்டர்கள் மற்றும் மெத்திலமைன்கள் உற்பத்தியிலும் மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது. மெத்தனால் உட்கொள்ளும்போது வாந்தி, வயிற்றுப் போக்கு, மூச்சு விடுவதில் சிரமம், மரணத்திற்கு வழிவகுக்கும் போலி மது தயாரிப்பதற்கு மெத்தனால் மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. உடலுக்கு தீங்குவிளைவிக்கும் மெத்தனாலை தயாரித்து அனுமதியின்றி விற்றால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Chella

Next Post

வீட்டில் வெடித்த சண்டை..!! கணவரை உயிரோடு எரித்த மனைவி..!! வேலூரில் திடுக்கிடும் சம்பவம்..!!

Tue May 16 , 2023
வேலூர் மாவட்டம் இலவம்பாடி கிராமம் கருநிகர் தெருவில் வசிப்பவர் சுரேஷ் (30). கட்டிட மேஸ்திரியான இவருக்கு லதா (29) என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. மேலும், கணவன்-மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு காரணமாகவும், சுரேசுக்கு குடிப்பழக்கம் இருந்ததாலும் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட […]

You May Like