fbpx

நண்பனுடன் லிவிங் டு கெதர்..!! பெண்ணாக மாறிய ஆண்..!! கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்..!!

ஆந்திர மாநிலம் விஜயவாடா நகர் கிருஷ்ண லங்கா என்ற பகுதியில் வசித்து வந்தவர் தான் நாகேஸ்வரராவ். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர். ஒரே மாதிரி உடை அணிதல், ஒன்றாகவே சாப்பிடுவது, ஒன்றாகவே வெளியே செல்வது என இவர்களது நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்த நெருக்கம் இருவரிடையே தன்பாலின ஈர்ப்பை ஏற்படுத்தியது.

நாகேஸ்வர ராவும் அவரது நண்பர் பவனும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தன்பாலின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரை விட்டு மற்றொருவர் வாழ முடியாது என்ற அளவிற்கு இவர்களது நெருக்கம் இருந்துள்ளது. இதனால், லிவிங் டு கெதர் முறையில் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளனர். பவன் தன்னிடம் இருந்த நகை, பணம் ஆகியவற்றை நாகேஸ்வர் ராவிடம் கொடுத்துள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், இருவரையுமே கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு பெண்களை திருமணம் செய்து கொண்டால், தனித்தனியாக பிரிந்து விடுவோம் என கருதியுள்ளனர். இதனால் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று நாகேஸ்வரராவ் ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதன்படி, நம்மில் யாராவது ஒருவர் பெண்ணாக மாற வேண்டும் என்றபோது பவன் பெண்ணாக மாற சம்மதித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பவன் அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறினார். பின்னர் நாகேஸ்வரராவிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் கூறியுள்ளார். ஆனால், நீ அழகாக இல்லை அதனால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என நாகேஸ்வர ராவ் மறுத்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பவன், கிருஷ்ண லங்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னிடம் இருந்த நகை, பணத்தை பறித்துக் கொண்டு தன்னை ஏமாற்றியதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, பவன் அளித்த புகாரின் அடிப்படையில், நாகேஸ்வர ராவ் மற்றும் அவரது தாயார் விஜயலட்சுமி மீது மோசடி, துரோகம் செய்வது மற்றும் திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், நாகேஸ்வர் ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

காதலிக்க மறுத்த 12 வயது சிறுமி..!! மாடி படிக்கட்டில் மறைந்திருந்த இளைஞர்..!! தாய் கண்முன்னே அரங்கேறிய சம்பவம்..!!

Fri Aug 18 , 2023
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே கல்யாண் திஷ்காவ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்ய காம்ப்ளே (20). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். எவ்வளவு முறை தனது காதலை வெளிப்படுத்தியும் அந்த சிறுமி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கோபத்தில் இருந்த ஆதித்ய காம்ப்ளே, சிறுமியை பின் தொடர ஆரம்பித்தான். சிறுமி தினமும் மாலையில் டியூசன் செல்வதையும், அவரது தாயார் கூடவே சென்று வருவதையும் கவனித்துள்ளான். […]

You May Like