fbpx

லாக்கர் ஒப்பந்தங்கள்..!! எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை..!! செப்.30 தான் கடைசி..!!

நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் திருத்தப்பட்ட வங்கி லாக்கர் விதிகளுக்கு இணங்குவதை இந்திய ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியது. புதிய வங்கி லாக்கர் விதிகளை ரிசர்வ் வங்கி வெளியிட்ட பிறகு, அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுடன் லாக்கர் ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தொடங்கியுள்ளன.

இதுபோன்ற சூழலில், புதிய லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கைகளை வழங்கி வருகிறது. ஜனவரி 1, 2023 முதல் புதிய விதிமுறைகளின்படி, வாடிக்கையாளர்கள் உடனான அனைத்து லாக்கர் ஒப்பந்தங்களையும் மாற்றுமாறு வங்கிகளுக்கு மத்திய வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், ஜனவரி 23, 2023 தேதியிட்ட செய்திக்குறிப்பின்படி, வங்கிகள் புதுப்பித்தல் செயல்முறையை இரண்டு கட்டங்களாக முடிக்கலாம். அதன்படி, 50% பணிகள் ஜூன் 30, 2023க்குள் முடிக்க வேண்டும், 75% பணிகள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதன் காரணமாக எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அனுப்புகிறது. வாடிக்கையாளர்களும் இந்த வேலையை விரைவாக முடிக்க வேண்டும். வங்கிகளுக்கு டிசம்பர் 31, 2023 வரை கடைசி காலக்கெடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

கர்ப்பிணி பெண்கள் சீந்தில் கொடியை பயன்படுத்தலாமா….!

Fri Sep 22 , 2023
தற்போதைய அறிவியல் மருத்துவத்தை விட, ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. ஆனால், ஆயுர்வேதத்தை பெரும்பாலும், தற்போது யாரும் விரும்புவதில்லை. இந்த ஆயுர்வேதத்தில் பல்வேறு நன்மைகள் ஒளிந்துள்ளனர். ஆனால், அதை விடுத்து அறிவியல் மருத்துவத்தில் ஈடுபட்டதால், மனிதனுக்கு புது, புது வியாதிகள் தான் வந்து சேர்ந்து விடுகின்றன. அந்த வகையில், சீந்திலில் இருக்கின்ற சிறப்பு குணங்கள் என்னென்ன என்பது பற்றிய தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது,சீந்திலில் உள்ள சிறப்பு […]

You May Like