திமுகவுடன் வெற்றிக் கூட்டணி தொடருகிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்றைய தினம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள், தேர்தல் பணி ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டம் காரணமாக கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. நிகழ்வை காங்கிரஸ் புறக்கணித்ததாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது. திமுகவுடன் வெற்றிக் கூட்டணி தொடர்கிறது. அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை ஊகத்தின் அடிப்படையில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.
English Summary : Problem in DMK – Congress alliance