fbpx

மக்களவை தேர்தல்!… தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்!… வரும் 8, 9-ம் தேதிகளில் ஆலோசனை!

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள், சென்னையில் வரும் ஜன. 8, 9-ம்தேதிகளில், தேர்தல் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலை வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை இந்தியதேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதற்காக அவ்வப்போது மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் காணொலி வாயிலாகவும், நேரடியாக அந்த மாநிலங்களுக்கு சென்றும் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் வரும் ஜன. 8, 9 ஆகிய இரு தினங்களும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். இதில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மாநில சட்டம் – ஒழுங்கு, வாக்குச்சாவடிகள் நிலை போன்றவை குறித்தும் இதில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Kokila

Next Post

குட் நியூஸ்..!! ரூ.6,000 நிவாரணத் தொகைக்கு நீங்களும் விண்ணப்பித்துள்ளீர்களா..? எப்போது கிடைக்கும் தெரியுமா..?

Fri Jan 5 , 2024
மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. இந்த 4 மாவட்டங்களில் சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும், மற்ற 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தாலுகாகளிலும் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.6 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 24 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில், நிவாரணம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், வருமான வரி செலுத்துவோர், அரசு உயர் அதிகாரிகள், சர்க்கரை குடும்ப […]

You May Like