fbpx

பிறந்து இரண்டே நாளில் கோடிக்கணக்கான சொத்துகளுக்கு அதிபதி..!! ரூ.52 கோடி, சொகுசு பங்களா பரிசு..!!

‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’, பிறக்கும்போது வாயில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்த குழந்தை என்ற வாசகம் ஆங்கிலத்தில் உண்டு. இந்த வாசகத்தை மெய்பிக்கும் விதமாக பிரிட்டனில் பிறந்து 2ஆம் நாளே ஒரு குழந்தை பல கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளது. இந்த குழந்தை குறித்த செய்திகளும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மிகப்பெரிய கோடீஸ்வரரான பாரி ட்ரூவிட் பார்லோவின் மகள் சாஃப்ரான் டிரைவ்ட் பார்லோ. 23 வயதான சாஃப்ரானுக்கும் கார்னர் என்பவருக்கும் திருமணம் நடந்து தற்போது ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தனக்கு பேத்தி பிறந்த மகிழ்ச்சியில் கோடீஸ்வரர் பாரி, ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது செல்ல பேத்திக்கு தனது அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ.52 கோடியை பரிசாக அளித்துள்ளார். அத்துடன் ரூ.10.44 கோடி மதிப்பிலான சொகுசு பங்களாவையும் தாத்தா பரிசளித்துள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள பாரி, தனது பேத்திக்கு மாரினா என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்தார். தனது பேத்திக்கான சொகுசு பங்களாவின் இன்டிரியர் உள்ளிட்டவற்றை மாற்றி அமைக்கவும் டிசைனர்களை அவர் களமிறக்கியுள்ளார்.

கோடீஸ்வரர் பாரி ஆடம்பர நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக சராசரியாக 4 மில்லியன் பவுண்ட் என கோடிக்கணக்கில் செலவிடுவார். சமீபத்தில் இவருக்கு ரோமியோ என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அவர் 25 கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு கப்பலை பரிசாக வழங்கினார். நாள்தோறும் கடுமையாக உழைத்து பணம் சேமித்து பணக்காரர்களாக மாற வேண்டும் லட்சக்கணக்கானோர் கனவும் காணும் வேளையில், பாரி வீட்டில் பிறக்கும் பச்சிளம் வாரிசுகள் பிறக்கும் போதே கோடிக்கணக்கான மதிப்பிலான பணம் சொத்துக்களை பரிசாக பெறுகின்றன.

Chella

Next Post

சொத்து மதிப்பு ரூ.1,000 கோடி..!! அதிகாரிகளை அதிரவைத்த தாசில்தார்..!! ரெய்டில் சிக்கியது எப்படி..?

Fri Jun 30 , 2023
கர்நாடக மாநிலத்தில் அரசுத் துறை பணியாளர்கள் ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த லோக் ஆயுக்தா பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சுமார் 62 இடங்களில் 15 அரசு அதிகாரிகள் குறிவைக்கப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் பல ஊழல் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தது. குறிப்பாக, பெங்களூரு கே.ஆர்.புரா தாசில்தார் அஜித் ராய் என்பவருக்கு தொடர்பான இடங்களில் […]

You May Like