புதுவை முதலியார் பேட்டை அனிதா நகர் சிமெண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனரான ராஜ்(34) பூமியான் பேட்டையில் இருக்கின்ற இவரது உறவினர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக, உயிரிழந்தார். அவருடைய உடல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால் அப்போது தென்னஞ்சாலை பகுதியில் அடக்கம் செய்ய வேண்டும் என ராஜு கடுமையாக வாக்குவாதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது
. ஒரு வழியாக உறவினர் அடக்கம் செய்யப்பட்டு ராஜு வீடு திரும்பினார்.
இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு அருகில் இருந்த கடைக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் ராஜு. அப்போது அந்த பகுதிக்கு வந்த 2 பேர் தாங்கள் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ராஜு மீது வீசி உள்ளனர் இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து முதலியார் பேட்டை காவல்துறையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து ராஜுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு அந்த பகுதியில் இருக்கின்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.