பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள், கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக பல பிரச்சனைகளை உருவாக்கி கொண்டு, ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்கின்றனர். குறிப்பாக நேற்றைய தினம், கடந்த 6 சீசனில் நடந்திடாத சம்பவம், சீசன் 7ல் அரங்கேறியது. அதாவது ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ள 6 போட்டியாளர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டது 7 போட்டியாளர்கள் என்றும், பவா செல்லதுரை வெளியேறிவிட்டதால் 6 போட்டியாளர்கள் மட்டுமே ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளனர்.
எனவே எங்களால் வேலைகள் செய்ய முடியாது, என ஸ்ட்ரைக் செய்தனர். இதனால் பிக்பாஸ் வீட்டைச் சேர்ந்தவர்கள் மதியம் சாப்பிடாமல் பசி பட்டினியால் வாடியதை பார்க்க முடிந்தது. பிக்பாஸ் வீட்டை சேர்ந்தவர்கள் அனுமதிக்காமல் கேஸ் ஆன் பண்ண முடியாது என்பதால், ஸ்மால் பாஸ் வீட்டைச் சேர்ந்தவர்கள் பழம் உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு தங்களின் பசியை போக்கிக் கொண்டனர்.
அதேபோல் பிக்பாஸ் வீட்டைச் சேர்ந்தவர்களும், சிப்ஸ் போன்றவற்றை சாப்பிட்டனர். ஆனால், ஸ்மால் பாக்ஸ் வீட்டை சேர்ந்தவர்கள் தண்ணீர் கூட கொடுக்க மறுத்ததால் சிக்கல் ஏற்பட்டது. பிக்பாஸும் இவர்களுடைய பிரச்சனைக்கு செவி சாய்க்காத நிலையில், அதிரடியாக களத்தில் இறங்கிய கேப்டன் சரவணன் விக்ரம், இனி நானே வீட்டில் உள்ள வேலைகளை செய்வதாக ஏற்றுக் கொண்டார். பின்னர் இந்த பிரச்சனை முடிவுக்கு வரவே மீண்டும் சமையல் செய்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்தனர்.
இதனை அடுத்து ஐஸ்வர்யாவும் மணியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மணி ரவீனாவைக் காதலிப்பதாக கூறியிருந்தார். ஆனால், ரவீனா இதனை தன்னிடம் சொல்லாமல் எதற்காக அவ கிட்ட சொன்னாய், உங்க வீடு வேற, எங்க வீட்டில இதை ஈசியா எடுத்துக் கொள்ளமாட்டாங்க, இந்த விஷயத்தை முதலில் நீ என் கிட்ட தானே சொல்லியிருக்கணும் என்று சொல்கிறார். இதனால் மணி கோவப்பட்டுக் கொண்டுள்ளார்.