fbpx

சமையல் எரிவாயுவின் விலை உயர்வு….! இல்லத்தரசிகள் அதிர்ச்சி….!

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை வெகுவாக அதிகரித்து வருவதால், இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனை குறைப்பதற்கான நடவடிக்கையில், மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தான் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விநியோகத்தை செய்து வருகிறது. சர்வதேச அளவிலான கச்சா எண்ணெயின் விலையை பொருத்து தான்,இந்த நிறுவனங்கள் சிலிண்டரின் விலையை நிர்ணயம் செய்கின்றன என்றும் சொல்லப்படுகிறது.

சென்ற இரண்டு வருட காலமாகவே, சிலிண்டரின் விலை வெகுவாக அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் சிலிண்டரின் விலை 1,118 என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆயிரம் ரூபாயை கடந்த சிலிண்டரின் விலையால், சாமானிய மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இதற்கு நடுவே, மத்திய அரசு வழங்கும் சிலிண்டருக்கான மானிய தொகை வாங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. என்ற புகார் எழுந்து வருகிறது. இந்த மானிய தொகையும் சிலருக்கு கிடைக்காததால், சிலிண்டருக்கு மட்டும் அதிக எண்ணிக்கையிலான பணத்தை செலவிட வேண்டிய சூழல் இருப்பதாக, இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.

Next Post

பெண்களுக்கான புதிய காப்பீட்டு திட்டம்….! எல்ஐசி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!

Sun Aug 13 , 2023
நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, அவ்வப்போது பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது அந்த நிறுவனம் ஒரு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதாவது, இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியானது பெண்கள் பயன்பெறும் விதத்தில், ஆதார் ஷீலா என்ற திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒருவர், ஒரு நாளைக்கு 87 ரூபாய் டெபாசிட் செய்தால், ஒரு வருடத்திற்கு, 31,755 […]

You May Like