fbpx

குட் நியூஸ்…! ரூ.500-க்கு கேஸ் சிலிண்டர்…! ஏப்ரல் 1 முதல் விலை குறைக்க அரசு அதிரடி முடிவு…! முழு விவரம் இதோ…

ரூ.500-க்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 12 சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்வர் அசோக் கெலாட் அளித்துள்ளார் ‌.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது மாநிலத்தில் பிபிஎல் மற்றும் உஜ்வாலா பிரிவின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு தலா 500 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அல்வார் மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் கெலாட், “விலைவாசி உயர்வு பிரச்சினை தீவிரமாக உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு பிபிஎல் குடும்பங்களுக்கு தலா ரூ.500 வீதம் ஒரு வருடத்தில் 12 கேஸ் சிலிண்டர்கள் அரசு சார்பில் வழங்கப்படும். அரசின் நலத்திட்டங்களின் பலன்களை யாரும் இழந்துவிடக் கூடாது.

சட்டசபையில் அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மீதமுள்ள அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிடுவேன். உஜ்வாலா யோஜனா என்ற பெயரில் எல்பிஜி இணைப்பு மற்றும் எரிவாயு அடுப்பு வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாடகம் ஆடினார். இப்போது அவர்களின் சிலிண்டர்கள் காலியாக உள்ளன. எல்பிஜியின் விலை ரூ.400ல் இருந்து தற்போது ரூ.1040 ஆக உயர்ந்துள்ளதால் யாரும் வாங்கவில்லை. பிபிஎல் கீழ் வருபவர்கள் அல்லது உஜ்வாலா யோஜனாவுடன் இணைக்கப்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தி ஏப்ரல் 1ம் தேதி முதல் 12 சிலிண்டர்கள் வழங்கப்படும்.

தற்போதைய விலையான ரூ. 1040க்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும் ரூ. 500 என நிர்ணயம் செய்யப்படும் என முதல்வர் கெஹ்லாட் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

பொங்கல் பரிசு தொகுப்பு - இன்று அல்லது நாளை தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Tue Dec 20 , 2022
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழக அரசின் சார்பில் சிறப்புத் தொகுப்புடன் ரூ.1000 பணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, ரொக்கப் பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது. ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், […]
பொங்கல் பரிசு ரூ.1,000..!! இதை செய்தால்தான் உங்களுக்கு பணம் கிடைக்கும்..!! எளிய டிப்ஸ் இதோ..!!

You May Like