fbpx

மத்திய பிரதேசம்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!! 7 பேர் பலி.! 30 பேர் கவலைக்கிடம்.! முதல்வர் அவசர ஆலோசனை.!

மத்திய பிரதேச மாநில பட்டாசு ஆலையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்து நாட்டையே அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் ஹர்தர் நகரில் மிகப்பெரிய பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. சற்று முன் அந்த ஆலையில் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 7 பேர் மரணம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த பயங்கர விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு அவசர நிலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் 30க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த வெடி விபத்து குறித்து மத்திய பிரதேசம் மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் அரசு அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

Next Post

'எங்கையோ கணக்கு இடிக்குதே’..!! அரசு வேலை அறிவித்த அண்ணாமலை..!! பாயிண்ட்டை பிடித்த பிடிஆர்..!!

Tue Feb 6 , 2024
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடை பயணத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், அப்போது தமிழ்நாட்டில் 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் ஆட்சி நடக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைத்தால், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்” என்று தெரிவித்தார். இதனை […]

You May Like