fbpx

குரூப் 4 தேர்வில் மீண்டும் முறைகேடா..? டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் பரபரப்பு விளக்கம்..!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 10,117 காலிப்பணியிடங்களில் தட்டச்சர் பிரிவில் மட்டும் 2,500 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப்பணியிடங்களுக்கு 450 பேர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து தேர்ச்சி பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே ஊரில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் இருந்து அதிகளவில் தேர்வாகியுள்ளதால் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுவதாகவும், இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில், ”குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை. ஒரு குறிப்பிட்ட தேர்வுக்கான பயிற்சி வழங்குவதில் குறிப்பிட்ட பகுதி என்பது முன்னணியில் இருக்கும். கடந்த காலங்களிலும் தட்டச்சர் பிரிவில் காஞ்சிபுரம் மற்றும் சங்கரன் கோவில் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஒரே பகுதியில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதால், எவ்வித முகாந்தரமும் இல்லாமல் முறைகேடு நடந்ததாக கூறுவது தவறானதாகும். எனவே, குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறுவது தவறாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

1 முதல் 9 வரை படிக்கும் மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..

Fri Apr 7 , 2023
புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு முன்கூட்டியே நடத்தப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.. கடும் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.. இந்த நிலையில், புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு […]

You May Like