fbpx

காதல் மனைவியை 8 துண்டுகளாக வெட்டிய கணவன்; திருவண்ணாமலையை உலுக்கிய கொடூர சம்பவம்!!!

திருவண்ணாமலை பேகோபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் 36 வயதான கோபி. ஆட்டோ டிரைவரான இவரது முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். அப்போது திருவண்ணாமலையில் உள்ள கவரிங் நகை கடையில் வேலை செய்த 29 வயது பெண் சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமான நிலையில், இவர்களுக்கு, ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 31-ந் தேதி தீபாவளி அன்று கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், மறுநாள் சரண்யாவை காணவில்லை. அரசுடையாம்பட்டு கிராமத்தில் உள்ள சரண்யாவின் தாயார் காவேரி, தனது மகளுக்கு பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப்பில் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காவேரி, திருவண்ணாமலைக்கு நேரில் வந்து விசாரித்துள்ளார்.

அப்போது, சரண்யா சில நாட்களாக வீட்டுக்கு வரவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த தாய் காவேரி உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் சரண்யா கிடைக்கவில்லை. இதையடுத்து, அவர் திருவண்ணாமலை டவுன் காவல் நிலையத்தில், தனது மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். மேலும், தனது மருமகன் கோபி மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே காட்டுப் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் உள்ள சிறிய பாலத்தின் கீழ் இளம்பெண்ணின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, போலீசார் கிருஷ்ணகிரிக்கு சென்ற போது, அங்கு இறந்து கிடந்தது சரண்யா என்பது தெரியவந்தது. சரண்யாவின் தலை, மார்பு பகுதி மற்றும் ஒரு தொடை ஆகியவை மட்டுமே அங்கு கிடந்த நிலையில், போலீசார் அதை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சரண்யாவை கோபி கொலை செய்து வீசியது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் கோபியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கோபி சிலரிடம் கடன் வாங்கியதால் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோபி சரண்யாவை கொலை செய்தார். சரண்யாவின் உடலை 8 துண்டகளாக வெட்டியுள்ளார்.

பின்னர் இது குறித்து அவரது தாய் சிவகாமிக்கு தெரிவித்த கோபி, தனது தாயுடன் சேர்ந்து சரண்யாவின் உடல் பாகங்களை ஒரு டிராவல் பையில் வைத்து அடைத்தனர். பின்னர் அவரது நண்பர் ராஜேந்திரனிடம் அவரது காரை எடுத்து வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து, காரில் சென்ற 3 பேரும், கிருஷ்ணகிரிமாவட்டம் சூளகிரி வனப்பகுதியில் 8 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்களை தனித்தனியாக வீசி உள்ளனர். இதையடுத்து, கோபி, அவரது தாயார் சிவகாமி மற்றும் டிரைவர் ராஜேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த பயங்கர கொலை சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more: புரோகிதருடன் சேர்ந்து மணமகள் போட்ட பிளான்.. 10 ரூபாய் நோட்டுகளால் நின்று போன திருமணம்!!!

English Summary

man-chopped-his-wife-into-pieces

Next Post

பெட்ரோல் பங்க் QR குறியீட்டை மாற்றி பணம் திருடிய நபர் கைது..!! மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி?

Mon Nov 11 , 2024
Man replaces QR code at fuel pump, swindles many: How can you stay safe

You May Like