fbpx

ஜாக்கிரதை!!! வண்டு கடித்ததால் கட்டிட தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்..

திருவட்டார் அருகே கொசுவன்பிலாவிளை மாத்தார் பகுதியை சேர்ந்தவர் 53 வயதான கிறிஸ்துராஜ். இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவரது தம்பியின் பக்கத்து வீட்டின் மாடியில் ரப்பர் மரம் சாய்ந்து கிடந்துள்ளது. இந்நிலையில், சாய்ந்த கிளைகளை அகற்றுவதற்காக கிறிஸ்துராஜ் அவரது தம்பி வீட்டிற்க்கு சென்றுள்ளார். அந்த ரப்பர் மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்துள்ளது. இதனை கவனிக்காமல் கிறிஸ்துராஜ், கிளைகளை வெட்டி அகற்றியுள்ளார்.

அப்போது, விஷ வண்டுகள் கிறிஸ்துராஜ் மீது கொட்டியது. இதனால் இவரின் உடல் முழுவதும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் யாவரை மீட்டு உடனடியாக தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கிறிஸ்துராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சம்பவம் குறித்து கிறிஸ்துராஜ் மகன் ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரில், திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Maha

Next Post

காட்டுக்குள் சென்ற கள்ளக்காதலர்கள்.. அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

Wed Sep 27 , 2023
ஈரோடு மாவட்டம், புதுப்பாளையம் காட்டு பகுதியில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் சடலம் மரத்தில் தொங்கியுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்றவர்கள், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அழுகிய நிலையில் தொங்கிய சடலங்களை மீட்டு, பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சடலமாக தொங்கியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் […]

You May Like