திருவட்டார் அருகே கொசுவன்பிலாவிளை மாத்தார் பகுதியை சேர்ந்தவர் 53 வயதான கிறிஸ்துராஜ். இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவரது தம்பியின் பக்கத்து வீட்டின் மாடியில் ரப்பர் மரம் சாய்ந்து கிடந்துள்ளது. இந்நிலையில், சாய்ந்த கிளைகளை அகற்றுவதற்காக கிறிஸ்துராஜ் அவரது தம்பி வீட்டிற்க்கு சென்றுள்ளார். அந்த ரப்பர் மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்துள்ளது. இதனை கவனிக்காமல் கிறிஸ்துராஜ், கிளைகளை வெட்டி அகற்றியுள்ளார்.
அப்போது, விஷ வண்டுகள் கிறிஸ்துராஜ் மீது கொட்டியது. இதனால் இவரின் உடல் முழுவதும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் யாவரை மீட்டு உடனடியாக தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கிறிஸ்துராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சம்பவம் குறித்து கிறிஸ்துராஜ் மகன் ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரில், திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.