fbpx

இறந்ததாக அறிவிக்கப்பட்டு 4 மணி நேரத்திற்கு பின் எழுந்த நபர்.. நரகத்தை பார்த்ததாக கூறியதால் அதிர்ந்த மருத்துவர்..

மரணத்திற்கு பின் என்ன நடக்கும் அல்லது மரணத்திற்கு பிறகும் ஒரு வாழ்க்கை உள்ளதா என்பது இன்று வரை மருத்துவர்களுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பதை கண்டறிய, என்.டி.இ.ஆர்.எஃப் (Near Death Experience Research Foundation) என்ற ஆராய்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த ஆராய்ச்சி அமைப்பு என்.டி.இ எனப்படும் மரணத்திற்கு நெருங்கிய அனுபவம் என்ற சோதனையை பல ஆண்டுகளாக செய்து வருகிறது. அதன்படி மரணித்த பின்பும் வாழ்க்கை உள்ளது என்பதற்கு இந்த என்.டி.இ சான்றாக உள்ளது என ஆன்மீகவாதிகள் கருதுகின்றனர்.

மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கை குறித்து அனைத்து மத நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.. மேலும் வெவ்வேறு நம்பிக்கைகளில் வெவ்வேறு பெயர்களால் அறியப்படுகிறது. மனிதர்களாகிய நாம், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது என்றாலும், மரணத்திற்கு அருகில் உள்ள அனுபவங்களைச் சந்தித்தவர்கள் மறுபக்கத்தைப் பார்ப்பதாகக் கூறிய பல நிகழ்வுகள் உள்ளன.

விஞ்ஞானத்தால் இது போன்ற நிகழ்வுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கோமா அல்லது மரணத்திற்கு அருகில் உள்ள அனுபவத்திலிருந்து மீண்டவர்கள் இதுகுறித்து தங்கள் அனுபவத்தை தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது ஒரு மருத்துவர் ,நரகத்திற்கு சென்று திரும்பிய நபர் குறித்து பல அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்துள்ளார்..

இதுகுறித்து பேசிய மருத்துவர் “ மார்பில் கத்தியால் குத்தப்பட்ட 20 வயதிற்குட்பட்ட ஒரு இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அந்த நபரின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடினர்.. எனவே அவர்கள் அவரை அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர், மிக மோசமாக இரத்தப்போக்கு ஏற்படுவதை நிறுத்தி, அவரது காயத்தை சரிசெய்ய முயன்றனர். எனினும், அவர் விரைவில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 4 மணி நேரம் கழித்து, அந்த மனிதன் உயிருடன் எழுந்தார்.. பின்னர் அழுது கொண்டே, நான் நரகத்திற்கு சென்று பேயின் கண்களை பார்த்தேன் என்று அந்த நபர் கூறினார்.

பின்னர் கடவுளை பிரார்த்தனை செய்ய முயற்சித்தபோது, பரலோகத்திலிருந்து வந்த ஒரு தேவதை தன்னை காப்பாற்றியதாக அந்த நபர் கூறினார்..” என்று மருத்துவர் தெரிவித்தார்.. அந்த நபரின் கண்களில் இருந்த பயங்கரமான தோற்றம் அவர் பொய் சொல்லவில்லை என்று நிரூபித்ததாகவும், பொதுவாக யாரும் இதுபோன்று சொல்ல மாட்டார்கள் என்பதால் அவர் அந்த மனிதனை நம்புவதாகவும் மருத்துவர் மேலும் கூறினார்.

சொர்க்கம் மற்றும் நரகம் என்ற கருத்து நாத்திகர்கள் மற்றும் பகுத்தறிவாளர்கள் மத்தியில் சர்ச்சைக்குரியதாக இருக்கும் அதே வேளையில், இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள் நம் மரணத்திற்குப் பிறகு உண்மையில் வேறு ஒரு உலகம் உள்ளதா என்று சிந்திக்க வைக்கிறது.

Maha

Next Post

தினமும் ரூ.333 முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் சுமார் ரூ.16 லட்சம் பெறலாம்.. அசத்தல் திட்டம்..

Wed Mar 22 , 2023
தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறந்த தேர்வாக மாறியுள்ளது.. பலரும் தங்கள் பணத்தை பாதுகாப்பான விருப்பங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்… எனவே சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை தபால் அலுவலகங்கள் வழங்குகிறது.. அதில் ஒன்று தான் போஸ்ட் ஆஃபீஸ் ரெக்கரிங் டெபாசிட் கணக்கு (RD).. போஸ்ட் ஆஃபீஸ் RD கணக்கைத் திறப்பது எளிதானது மற்றும் 10 வயதுக்கு மேற்பட்டோர் அல்லது குழந்தைக்கும் கிடைக்கும். குறைந்தபட்ச […]
அஞ்சல் துறையில் வேலை..!! மாதம் ரூ.63,000 வரை சம்பாதிக்கலாம்..!! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!!

You May Like