fbpx

மேகதாது அணை வழக்கு..! தமிழக அரசின் புதிய மனு வரும் 19ஆம் தேதி விசாரணை..!

மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனு மீதான விசாரணை வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

காவிரியின் குறுக்கே, ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய நான்கு அணைகளை, கர்நாடக அரசு கட்டியுள்ளது. இதனால், தமிழகத்தில் காவிரி நீரோட்டம் தடைபட்டு உள்ளது. இந்நிலையில், மேகதாது என்ற இடத்தில் புதிய அணையை கட்ட, கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்றால், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். இதற்காக, காவிரி மேலாண்மை ஆணையத்திடம், கர்நாடக அரசு அனுமதி கேட்டுள்ளது.

மேகதாது அணை.. காவிரி நதிநீர் ஆணையத்தில்.. விரிவான திட்ட அறிக்கையை  சமர்ப்பித்த கர்நாடக அரசு | Karnataka submitted a detailed project report to  the Cauvery River board Commission ...

மேகதாது அணை தொடர்பான விவாதம் நடத்த அனுமதிக்கப்படும் என காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடை கோரி, உச்சநீதிமன்றத்தில், கடந்த 7ஆம் தேதியன்று தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனு, வரும் 19ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையை பொறுத்தே, இம்மாதம் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடக்குமா என்பது தெரியும்.

Chella

Next Post

ஓ.பன்னீர்செல்வத்திடம் இருக்கும் 6 மாவட்ட செயலாளர்களை நீக்க முடிவு..! எடப்பாடி பழனிசாமி அதிரடி..!

Thu Jul 14 , 2022
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் 6 பேரை அதிரடியாக நீக்க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கட்சி பணிகளில் தன்னிச்சையாக செயல்பட தொடங்கி உள்ளார். இது தொடர்பாக அதிமுக முன்னணி நிர்வாகிகளுடன் தனது வீட்டிலேயே தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், புதிய நிர்வாகிகளை நியமித்தும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். […]
புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்..? அடிமேல் அடி விழுந்ததால் பயங்கர அப்செட்..!!

You May Like