ஈரோடு மாவட்டம் வாணிகவுண்டன் பாளையத்தில் வசித்து வருபவர் வெங்கடாசலம். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சரஸ்வதி திடீரென வீட்டின் முன்புறம் உள்ள 80 அடி ஆழ்துளை கிணற்றில் குதித்துள்ளார். சரஸ்வதி தண்ணீர் இல்லாமல் 1 அடி ஆழமுள்ள சேற்று கிணற்றில் மாட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார்.
நேற்று காலை, அந்த வழியாக சென்ற பச்சையப்பன், கிணற்றுக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டது. தண்ணீரில் மிதந்த சரஸ்வதியை பார்த்து பச்சையப்பன் அதிர்ச்சி அடைந்தார்.
இதனை தொடர்ந்து அவர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி சரஸ்வதியை தண்ணீரில் இருந்து வெளியே எடுத்தனர்.
இதனையடுத்து மீட்கும் முயற்சியில் சரஸ்வதியின் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர் சரஸ்வதியை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.