fbpx

மக்களே…! தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸ்‌ அளவில் இருக்கும்…!

தமிழகத்தில் வரும் 19-ம்‌ தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவிய அதிதீவிர “மோக்கா” புயல்‌ நேற்று மதியம்‌ தென்கிழக்கு வங்கதேசம்‌ மற்றும்‌ வடக்கு மியான்மர்‌ கரையை கடந்தது. மேற்குதிசை காற்று மற்றும்‌ வெப்ப சலனம்‌ காரணமாக மிதமான மழைபெய்யக்கூடும்‌. இன்று முதல் 17-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

வரும் 18,19 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30டிகிரி செல்சியஸ்‌ அளவை ஒட்டியேஇருக்கும்‌ என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

மாணவர்களே..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! அப்புறம் ரூ.1,000 செலுத்தனும்..!!

Tue May 16 , 2023
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில், கடந்த மே 8ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இதில் மொத்தம் 47 ஆயிரத்து 934 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் தேர்வுக்கு செல்லாத மாணவர்களுக்கு ஜூன் 19 முதல் 26 ஆம் தேதி […]

You May Like