fbpx

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மட்டும்…! மழை குறித்து வானிலை மையம் முக்கிய தகவல்…!

தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் 21-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

பெண் ஆபாச உடை அணிந்திருந்ததால் இந்த சட்டப்பிரிவு பொருந்தாது...! நீதிமன்றம் ஜாமின் வழங்கி தீர்ப்பு...!

Thu Aug 18 , 2022
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் எழுத்தாளர் சிவிக் சந்திரன் என்பவருக்கு கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது, புகார்தாரர் ஆத்திரமூட்டும் உடை அணிந்திருந்தால், இந்திய தண்டனைச் சட்டத்தின் 354A பிரிவின் கீழ் அவர் மீதான குற்றச்சாட்டுகள் முதன்மையாக இருக்காது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்றம் தனது உத்தரவில், மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை வைத்துப் பார்க்கும்போது, புகார் அளித்த பெண் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் ஆடை அணிந்துள்ளார். […]

You May Like