அரியலூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஒக்கநத்தம் கிராமத்தில் அஞ்சப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் தேவி இந்த தம்பதிகளுக்கு அனுசுயா என்ற 17 வயது மகள் இருக்கிறார். இந்த நிலையில் தான் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்த அனுசியா நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டில் படுத்து உறங்கினார். இதனைத் தொடர்ந்து, மறுநாள் காலை எழுந்து பார்த்த போது அனுசுயா வீட்டில் இல்லை.
இதன் காரணமாக, அதிர்ந்து போன குடும்பத்தைச் சார்ந்தவர்கள், அனுசியாவை பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தனர் ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இது தொடர்பாக அனுசாகும் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் மிக தீவிரமாக அனுஷியாவை தேடி வருகின்றனர்.