அரியலூரில் அமைந்துள்ள ஶ்ரீ ஆலந்துறையார் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாக இருந்து வருகிறது. 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருகோயிலாக இருந்து வரும் இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் விழா நடைபெறுவது வழக்கம். மேலும் இக்கோயிலில் அமைந்துள்ள லிங்கம் சிலை மிகவும் சிறியதாக இருக்கும். இதனால் லிங்கத்தின் மீது குவளை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கம் மற்றும் குவளைக்கு தினமும் சாம்பிராணி தைலம் பூசப்பட்டு வருகிறது. பரசுராமர் […]

அரியலூர் அருகே 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமி அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு(20). இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து […]

அரியலூர் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் கட்டிட தொழிலாளியின் நண்பரை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன. அரியலூர் மாவட்டம் நாகப்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமுருகன். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராஜகுமாரி. இந்நிலையில் ராஜமுருகன் போலிப்பாளையம் பகுதியில் […]

கால்நடை பராமரிப்பிற்காக வட்டியில்லா கடன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், கால்நடை பராமரிப்புக்கான நடைமுறை மூலதனக் கடன் வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே ஆடு, மாடு ஆகிய கால்நடைகள் வைத்துள்ள விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி மேற்படி நடைமுறை […]

அரியலூர் அருகே பூப்பறிக்கும் வேலைக்காக சென்ற ஒரு சிறுமியை 60 வயது முதியவரான கூலித் தொழிலாளி, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொற்பதிந்த நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (60). கூலித்தொழில் பார்த்து வரும் இவர், பூப்பறிக்கும் வேலைக்கு வந்த ஒரு சிறுமியை மிரட்டி, அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதன் காரணமாக, அந்த சிறுமி கர்பம் […]

அரியலூர் அருகே விவசாய நிலத்தை பாதுகாப்பதற்காக இரவு விவசாய நிலத்திற்கு அருகில் இருந்த கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்த விவசாயி காலையில் மர்மமான முறையில், உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் தனக்கு சொந்தமான ஒரு நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். ஆகவே, நாள்தோறும் இரவு நேரத்தில், தன்னுடைய விவசாய நிலத்திற்கு காவல் காப்பதற்காக செல்வதை இவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். […]

அரியலூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஒக்கநத்தம் கிராமத்தில் அஞ்சப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் தேவி இந்த தம்பதிகளுக்கு அனுசுயா என்ற 17 வயது மகள் இருக்கிறார். இந்த நிலையில் தான் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்த அனுசியா நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டில் படுத்து உறங்கினார். இதனைத் தொடர்ந்து, மறுநாள் காலை எழுந்து பார்த்த போது அனுசுயா வீட்டில் இல்லை. இதன் காரணமாக, […]

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே திருச்சி, சிதம்பரம் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடையார்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆகவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு அந்த இளம் பெண் […]

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துசேர்வாமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்வேந்திரன். இவர், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்து ஆசை வார்த்தை கூறி கணவன், மனைவியாக வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பிறகு சில நாட்கள் கழித்து […]

அரியலூர் அருகே இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பும் வேறொரு நபருடன் தொடர்பிலிருந்து பெண்ணை உறவினர்கள் அந்த நபரிடமிருந்து கூட்டி வந்த நிலையில் தனியாக இருந்த பெண் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலை கடம்பூர் என்ற கிராமம் உள்ளது இந்த கிராமத்தைச் சார்ந்த மணிவண்ணன் என்பவரது மகள் சத்யா வயது 28. இவருக்கும் விக்கிரமங்கலம் அருகே […]